செந்தில் பாலாஜியின் காவல் 21வது முறை நீட்டிப்பு!

Filed under: அரசியல்,சென்னை |

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.