சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நான்காம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற அதிகமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.