சென்னை மற்றும் மைசூர் இடையே வந்தே பாரத் ரயில்!

Filed under: இந்தியா,சென்னை |

சென்னை மற்றும் மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நவம்பர் 10ம் தேதி முதல் வந்தே பாரத் சென்னை மற்றும் மைசூருக்கிடையே இயக்கப் போவதாகவும் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும்- மைசூர் இடையே 483 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் மைசூர் செல்பவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.