சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் சில மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை கொட்டப் போவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.