சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? அதன் பின் புயலாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.