புதுடில்லி அரசு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்னை பெரிதாகவே உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. குளிர்காலத்தில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டும் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபடுவதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
#BREAKING: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73 சதவீதம் உயர்வு - மத்திய சுகாதார அ...
குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்: அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை :28-ல் விழுப்புரத்தில் ...
கழிவறையில் ரகசிய கேமரா: 2000 ஆபாச வீடியோக்கள்!