டீசல் தட்டுப்பாடு இல்லை!

Filed under: இந்தியா |

இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. சென்னையிலுள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருக்காது என்றும் பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.