தகிக்க போகும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Filed under: தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பல இடங்களில் உயரும் என தெரிவித்துள்ளது.

இந்த வருடம் தமிழ்நாட்டில் இன்னும் அக்கினி வெயிலே தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. இம்மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் ஏப்ரல் 25 வரை மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சமவெளி பகுதிகளில் 39-42 டிகிரி செல்சியஸும், இதர பகுதிகளில் 34-39 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது,