தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சே!

Filed under: உலகம் |

பசில் ராஜபக்சே துபாய்க்கு தப்பி செல்ல முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் அரசின் செயலற்ற தன்மையால் மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் ராஜபக்சே, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் வெளி நாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே, துபாய் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற போது அவரைப் பார்த்து, வெளியேறும்படி தெரிவித்துள்ளனர். அத்துடன் குடியேற்றத்துறை அதிகாரிகளுடன் பசில் ராஜபக்சே வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.