தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது: கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. தண்ணீர் திறக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. எச்சூழலிலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது என்ற கேள்விக்கு இடமில்லை. இதுவரை தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு கர்நாடகா அரசில் இருக்கும் நாங்கள் முட்டாள் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.