தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம் ரத்து!

தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதையடுத்து எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் மற்றும் மதுரையிலிருந்து பெங்களூரு வந்தே பாரத் ரயில் திட்டமிட்டபடி தொடங்கப்படுமா அல்லது இந்த ரயில் தொடங்கும் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.