தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளை!

Filed under: உலகம்,சென்னை |

சென்னை ஐஐடி கிளை தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியா நாட்டில் திறக்கப்பட உள்ளது. சென்னை தவிர வேறு இடங்களில் கிளை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய கல்வி மைய தரவரிசையில் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்தது. தென்னாபிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐஐடியின் புதிய கிளை தொடங்க இருக்கிறது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி, “விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும். நமது இந்தியாவின் அடிப்படையை அறிவை பகிர்வது தான். கல்வியை வியாபாரமாக நாம் பார்ப்பதில்லை. தான்சானியாவில் சென்னை ஐஐடி தொடங்க இருப்பது புதிய மைல்கள். தான்சானியா அரசும், இந்திய அரசும் இந்த புதிய கிளைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.