திடீரென பதவி விலகிய சரத்பவார்!

Filed under: அரசியல்,இந்தியா |

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த பல ஆண்டுகளாக இருந்த சரத்பவார் திடீரென தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரத்பவார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியை தொடங்கியது முதல் சரத்பவார் தலைவர் பதவியிலிருந்து வருகிறார். மகாராஷ்டிராவில் ஒரு வலுவான கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அரசியலிலிருந்து விலகவில்லை என்றும் மக்களுக்காக பணியாற்றுவது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் எதற்காக பதவியிலிருந்து விலகுகிறேன் என்ற காரணத்தை அவர் சொல்லவில்லை. மேலும் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அக்ககட்சியின் முன்னணி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.