திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்” என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? பாம்பிடம் சீண்டுவது போல், திமுக ஆளுநரிடம் சீண்டினால் அவர் கொத்தத் தான் செய்வார். காவிரி விவாகரத்தை இந்தளவு முற்றியதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” என்று அவர் கூறியுள்ளார்.