திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கும் உறுதியாகியுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரது உடல்நிலை குறித்து பேசியுள்ளார். மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.