துணை முதல்வர் பதவியா? உதயநிதியின் பதில்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வரும் தகவல் வதந்தியே என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்று திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் துணை முதலமைச்சராக போகிறேன் என பத்திரிகைகளில் கிசுகிசுக்களும், வதந்திகளும் வந்துள்ளதாகவும், அதனை நம்பி, நாமும் அந்த இடத்திற்கு துண்டு போட்டு வைப்போம் என்ற பெயரில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என இளைஞர் அணியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த செய்தி வெறும் வதந்தி தான். எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது” என்று கூறினார்.