‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானியின் எச்சரிக்கை!

Filed under: இந்தியா,உலகம் |

மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஞ்ஞானி அடுத்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் என எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிராங்க் ஹுகர்பீட்ஸ் என்பவர் நெதர்லாந்தை சேர்ந்த புவியில் ஆராய்ச்சி விஞ்ஞானி. இவர் துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று நாட்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் தற்போது தான் அவருடைய டிவிட் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பிராங்க் ஹுகர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் இந்தியாவை கடந்து இந்திய பெருங்கடலில் அந்த நிலநடுக்கம் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.