தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு?

Filed under: தமிழகம் |

இரண்டு நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் பிரசித்திப்பெற்ற வீரசகாதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இன்று மாலை 6 மணி முதல் மே 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி அந்த உத்தரவில், “ஐந்து நபர்களுக்கு மேற்பட்ட கூட்டம் சேரக்கூடாது, பிற மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது. வெளி மாவட்ட வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவிலிருந்து பள்ளி கல்லூரி வாகனங்கள், அத்தியாவசியமான தினசரி வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு. மேலும் அன்னதானங்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு முன் காவல்துறையை அணுகி முன் அனுமதி பெற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது