தெலுங்கானா பாஜக எம்.பி.யின் ஓப்பன் டாக்!

Filed under: அரசியல்,இந்தியா |

தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி எம்.பியான சோயம் பாபு ராவ் என்பவர் தனது தொகுதி மக்களிடையே பேசியுள்ள வீடியோவில், “எனக்கு இந்த தொகுதியில் வீடு இல்லை. அதனால் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டேன். எனது மகனின் திருமணத்தை கூட தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்துதான் நடத்தினேன். வேறு எந்த தலைவர்களும் என்னை போல இதை தைரியமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்” என பேசியுள்ளார். தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிதியை சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்திய சோயம் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.