தேனிலவுக்கு ராமர் கோவிலா? விவாகரத்து கேட்ட மனைவி!

Filed under: இந்தியா |

இளம் மனைவி தேன் நிலவுக்கு கோவா அழைத்து செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு அதன் பிறகு தனது கணவர் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்றதால் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் போபாலை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி தனது கணவரிடம் தேன்நிலவுக்கு கோவா அழைத்துச் செல்லுமாறு கூறியிருந்தார். கணவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கணவரின் தாயார் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தேனிலவுக்கு கோவா செல்வதற்கு பதிலாக ராமர் கோவிலுக்கு தனது அம்மாவையும் மனைவியை மழைக்குச் சென்றதாக தெரிகிறது. கோவா மற்றும் சில பகுதிகளுக்கு தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கணவரின் தாயாரால் திட்டம் மாறியதையடுத்து இளம் பெண் அதிருப்தியடைந்தார். கணவர் மீது குற்றம் சாட்டி விவாகரத்துக்கு ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.