நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூவுடன்அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவம் நிறைந்த அவருடைய பேச்சில் யதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டும் என்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை. அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” என்று பதிவிட்டுள்ளார்.