நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!

Filed under: சினிமா |

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடிப்பவர். இவர் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது சம்பளம் குறித்த முக்கிய தகவல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் ஒரே மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்க விரும்புவதில்லை. நான் நடித்து வெளியான “காஞ்சிவரம்,” “இருவர் பொம்மரிலு,” “ஆகாச மந்தா,” “மேஜர்” ஆகிய திரைப்படங்களில் ஒரு வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்தான். ஆனால், கமர்ஷியல் படங்களில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டு எனக்குப் பிடித்த படமாக இருப்பின் குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வேன். முன்னணி நடிகர்களுடன் 30 ஆண்டு அனுபவமுள்ள நடிகர்கள் போட்டியிட வேண்டிய கட்டாயம் உள்ளது. நட்சத்திர அந்தஸ்து அடையாளம் என்பது இப்போது மாறிவிட்டது. மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தால்தான் ரசிகர்களின் பாராட்டை பெறமுடியும்” என்று கூறியுள்ளார்.