நடிகர் விக்ரம் பதிவிட்ட டுவிட்!

Filed under: சினிமா |

நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் “கடம்பூர் மாளிகை வேணாம்.. தஞ்சை புறப்பட்ட ஆதித்த கரிகாலர்!” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெய்ராம் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இம்மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தற்போது ஆதித்த கரிகாலராகவே மாறி தனது டுவிட்டரில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, குந்தவையாக நடித்த திரிஷா, அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி ஆகியோரையும் டேக் செய்துள்ளார். இதனால் பட ரிலீஸுக்கு முன்னதாக இவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.