நடுவழியில் நிற்கும் ரயில்கள்!

Filed under: உலகம் |

மின்சார ரயில்கள் பலவும் பாகிஸ்தானில் நடுவழியில் நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சாரம் இல்லாமல் பல நகரங்கள் பாகிஸ்தான் இருளில் மூழ்கியுள்ளது.

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்நாடு திவாலாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரமின்றி நடுவழியில் ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சனையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எனினும் 12 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமாபாத், பெஷாவர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.