நவம்பர் 11, 12 தேதிகளில் மிக கனமழை!

Filed under: தமிழகம் |

வானிலை மையம் தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளது. இதனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.