நிதிஷ்குமார் மீண்டும் அணி மாறுகிறாரா?

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அமைக்க வழிவகை செய்யும். அதே போல் நிதீஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதால் நிதிஷ்மாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அது மட்டும் இன்றி சுயேச்சை உள்பட மற்ற சிறிய கட்சிகள் 17 எம்பிகள் இருப்பதால் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது மூன்றும் முடிவாகிவிட்டால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.