நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் இறங்குமா?

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் மீட்பு படையினர் மிக விரைவாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியும். இதுகுறித்து சாலை போக்குவரத்துதுறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிபேடு அமைக்கும் பணி நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.