நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் மாயம்!

Filed under: உலகம் |

6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.