நோக்கியாவின் மாஸ்!

Filed under: இந்தியா,உலகம் |

நோக்கியா நிறுவனம் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் பற்றிய மாஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்றும், நிலவில் 4ஜி நெட்வொர்க் என்பது எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், விண்வெளி தொடர்பு துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை சாதிக்க முடியும் என்றும், நிலவில் நெட்வொர்க் அமைப்பதன் மூலம் நிலவை ஆய்வு செய்யவும் புதிய கண்டுபிடிப்புகளை பெறவும் முடியும் என்றும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.