பங்குச்சந்தை மூன்றாவது நாளாக தொடர் சரிவு!

Filed under: உலகம் |

இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாகவே சரிந்த நிலையில்தான் உள்ளது. ஆனால் தினமும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வகையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 15 புள்ளிகள் சரிந்து 18036 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே பங்குச்சந்தை சரிந்தது போலவே இன்றும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளது என்பதால் இன்னும் 60 ஆயிரத்துக்கும் அதிகமாகவே சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது.