பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

Filed under: தமிழகம் |

பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் நிலையில் அவைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சில இடங்களை அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக ஆலையில் இருந்த மூன்று அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகியுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாக உள்ளது. இந்த ஆலை விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்