பட்டாசு விற்பனை சங்கம் அதிரடி முடிவு!

Filed under: சென்னை |

பட்டாசு விற்பனை சங்கம் முதன்முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசுகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரியான விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் முதல் முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை தீவுத்திடலில் 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் கடைகளை அமைக்க இருப்பதாகவும் அனைத்து கடைகளிலும் கூட்டுறவு முறைப்படி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பட்டாசு விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.