பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

Filed under: இந்தியா |

இளைஞர் ஒருவர் தனது பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் இன்றைய காலத்தில் மிகவும் ஆடம்பரமாகவும், அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஆடம்பரமாக செய்ய திருமணத்திற்காக பல லட்சம், கோடிகளை செலவழித்து வசதியான பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கின்றனர். வசதியற்றோர் தங்கள் வசதிக்கேற்றபடி திருமணம் செய்கின்றனர். திருமணத்தின் போதும், திருமணம் நிச்சயதார்த்தத்தின்போது, மணமக்கள் அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், திருமணத்திற்காக பற்களை அழகுப்படுத்த சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில், அடுத்த மாதம் நடக்கவிருந்த திருமணத்திற்காகத் தன் பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லட்சுமி நாராயணா (28) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரது தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகளவில் அனஸ்தீஷியா மருந்து அளித்ததால்தான் மகன் உயிரிழந்ததாக, அந்த மருத்துவமனையின் மீது இளைளைஞரின் தந்தை புகாரளித்துள்ளார். பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.