ஆன்லைன் செயலியில் கடனால் இளைஞர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

கடன் வாங்கியவர்களை மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி உள்ளார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் செயலியில் கடன் தருபவர்கள் போன் மூலம் மிரட்டியதாகவும் மார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களை அவர்களது காண்டாக்ட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதாகவும் பல புகார்கள் வந்துள்ளது. இளைஞர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.