பள்ளி மாணவி பலாத்காரம் குறித்து கனிமொழி வருத்தம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக எம்.பி கனிமொழி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வடு இன்னமும் நீங்காமல் உள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டள்ளார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்” என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.