பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் அவர் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மீண்டும் பாஜகவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியது. நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை விளக்கமளித்தார். சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமாலயத்திற்கு வருகை புரிந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, அண்ணாமலை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தமிழிசை மீண்டும் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “பாஜகவில் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. கஷ்டமான முடிவை நான் இஷ்டமாக எடுத்துள்ளேன். ராஜ்பவனை விட்டு விட்டு மக்களின் நலனுக்காக கமலாயத்திற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அனைவருடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறினார். அண்ணாமலை இது குறித்து கூறும்போது, “அதிகாரத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற தமிழிசை மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியல் அனுபவத்துடன் நிர்வாக அனுபவமும் பெற்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.