பாஜகவுடன் கூட்டணி இல்லை திட்டவட்டம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டுள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இக்கூட்டணியிலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகியது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், ‘பாஜகவுக்கு நன்றி மீண்டும் வரவேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது. தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை தயார் செய்து வருகிறது. “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், தேர்தல் பணியில் மாவட்ட செயலாளர்களின் தலையீடு இருந்தால் நேரடியாகப் புகார் அளிக்கலாம். மாவட்டசெயலாளர்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், கட்சிக்காக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துங்கள்’’ என்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.