பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

அண்ணாமலை, “இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது” தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, “திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது. தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி. தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை தாண்ட விடாமல் தடுத்தது திமுகதான். இன்னும் ஒரு வாரம் வரை சாப்பிடாமல் உறங்காமல் கடுமையாக உழைத்தால்தான் பிரதமர் மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக முடியும். 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும். தமிழக மக்கள் மோடியை ஆசிர்வதிக்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.