பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு!

Filed under: இந்தியா,சினிமா |

இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசித் தாக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

இந்தி சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் கைலாஷ் கேர். இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். கடந்த 2022ம் ஆண்டு வெளியான “வைசா பி ஹோதா ஹை பரர்ட் 2” என்ற படத்தில் இடம்பெற்ற “அல்லாஜ் கே பந்த்” என்ற பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், “வெயில்” படத்தில் இடம்பெற்ற “வெயிலோடி விளையாடி,” “மெர்சல்” படத்தில் “ஆளப்போறான் தமிழன்” ஆகிய பாடல்கள் பாடியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கைலாஷ் கெர் பாடிக்கொண்டிருக்கும் போது அவர் மீது கன்னட பாடல்கள் பாடக்கோரி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.