காந்தாரா பாடலை நீக்கிய ப்ரைம்!

Filed under: சினிமா |

தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக ரிலீசான “காந்தாரா” திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றதோடு அல்லாமல் இந்தியா முழுதும் வசூலில் கலக்கி வருகிறது. ஆனால் இத்திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். உலகம் முழுதும் இத்திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட “காந்தாரா” திரைப்படம் பட்ஜெட்டை விட 20 மடங்கு அதிக வசூலை திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது.

இப்படத்தில் “வராஹ ரூபம்” பாடல் தங்களின் பாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்டதாக, தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற குழுவினர் புகாரளித்துள்ளனர். அது பெரும் சர்ச்சையானது. இப்போது ஓடிடியில் “காந்தாரா” திரைப்படம் வெளியாகியுள்ளது. “வராஹ ரூபம்“ பாடல் நீக்கப்பட்டு, அதற்குப் பிறகு வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமந்தா தரப்பில் உண்மை தகவல்!