பிராங்க் வீடியோவால் டிடிஎப் வாசனுக்கு சம்மன்!

Filed under: தமிழகம் |

யூடியூபர் டிடிஎப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் அம்மாநில போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த மாதம் விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎப் வாசன் வெளியே வந்திருந்தார். டிடிஎப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த யூடியூபர் டிடிஎப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருமலை முதலாவது நகர் காவல் நிலையத்தில் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விளக்கம் அளிக்க கோரி டிடிஎப் வாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.