இன்று அட்ஷய திருதியை

Filed under: தமிழகம் |

நகைக்கடைகளில் இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்ற காரணத்தினால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை நேரமே திறக்கப்பட்டு விட்டன. மேலும் நகை விற்பனையை அதிகரிக்க செய்கூலி, சேதாரம் இல்லை போன்ற அறிவிப்புகளையும் பல நகைக்கடைகள் அறிவித்து வருகின்றன. பல கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில நாட்களாகவே பலர் வந்து நகைகளை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்களாம்.