“பிரிவதைத் தவிர வேறு வழியில்லை”!

Filed under: சினிமா |

பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சமீபத்தில் கலந்து கொண்டார்.

நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து செய்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ரிலீசானது. அடுத்து “குஷி,” “யசோதா” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் கைவசம் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அவ்வப்போது விவாகரத்து குறித்த கேள்விகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பிரபல ரியாலிட்டி ஷோவான காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் “திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் இந்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனால் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். மேலும் எப்போதையும் விட வலிமையாக உள்ளேன். இந்த வாழ்க்கை இப்போது எனக்கு வசதியாகவே உள்ளது” என கூறினார்.