புகையில்லா நாடாக மாற்ற திட்டம்!

Filed under: உலகம் |

இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பத்றகும் நியூசிலாந்து நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

புகை இல்லா நாடாக மாற்ற நியூசிலாந்து நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025ம் ஆண்டுக்குள் புகைபிடிப்பில்லாத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. நியூசிலாந்து நாடு போலவே இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இளைஞர்கள் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.