புதிய புயலின் ‘மிதிலி’!

Filed under: தமிழகம் |

புதிதாக வங்க கடலில் உருவாகி வலுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் என்ன பெயர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் மாலத்தீவுகள் பரிந்துரைத்த “மிதிலி” என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மோக்கா, ஹாமூன் புயல்கள் உருவான நிலையில் இந்த ஆண்டில் உருவாக உள்ள மூன்றாவது புயல் இதுவாகும்.