புனே கார் விபத்தில் சிறுவனின் தாத்தா பற்றி அதிர்ச்சி தகவல்!

Filed under: இந்தியா |

17 வயது சிறுவன் புனேவில் கார் விபத்தை ஏற்படுத்தினான். அச்சிறுவனின் தாத்தா ஏற்கனவே ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் அவர் தீவிரவாதியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மது போதையில் கடந்த சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் கார் ஓட்டியபோது, இருசக்கர வாகனத்தில் மோதியதால் அந்த வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சிறுவன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறுவனுக்கு ஜாமீன் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வால் என்பவருக்கு துப்பாக்கி சூடு வழக்கு ஒன்றில் தொடர் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் தாதா சோட்டா ராஜனுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இவ்வழக்கு தற்போது கார் விபத்து மூலம் மீண்டும் தூசி தட்டப்பட்டிருப்பதாகவும் இந்த வழக்கு விசாரணை தீவிரமடைய இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.