ரயிலிலிருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி!

Filed under: இந்தியா |

கல்லூரி மாணவி ஒருவர் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்குமிடையே சிக்கிய சம்பவம் திருப்பதி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வரும் சசிகலா நேற்று குண்டூரிலிருந்து ராயகடா எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது கால் தவறியதில் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்குமிடையே சிக்கியுள்ளார். உடனே ரயில் நிறுத்தப்பட்டதுடன் மாணவியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரங்கள் போராடியும் மாணவியை வெளியே எடுக்க முடியாததால் பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ரயில்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.