பூண்டு விலை வரலாறு காணாத உயர்வு!

Filed under: தமிழகம் |

கடந்த சில வாரங்களாகவே பூண்டின் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ பூண்டு சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய சந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பில் இயங்கி வருகிறது. இச்சந்தையின் சிறப்பு அம்சமே இங்கு விற்பனையாகும் பொருட்கள், காய்கறிகள் எப்போதும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டின் விலை 450-லிருந்து 510 ரூபாய் வரை விற்பனையாகுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு சராசரியாக 150, ரூபாயிலிருந்து 180 ரூபாய் என விற்பனையானது. தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பூண்டு விலையால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர் சராசரி மக்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் நிலையில், அன்றாட செலவினங்கள் கூட செய்ய முடியாமல் ஏழை எளிய மக்கள் திண்டாடி வருகின்றனர். அத்தியாவசிய பொருளான பூண்டின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.