பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

Filed under: சென்னை |

சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் என எல்லோரும் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வருகை தற்போது அதிகரிப்பால் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இதை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பலரும் பாதிக்கப்பட்டு வருவதும் இதனால் பலர் தவறான முடிவுக்கு வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒரு பெண் அவர் மீது புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.