பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் 400 பேரிடர் மீட்பு படைக்குழு மற்றும் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அணை நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து அதற்கு ஏற்றவாறு மழை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.